Sunday, April 12, 2015

கண்ணும் கண்ணும் கலந்து .....

கண்ணும் கண்ணும் கலந்து .....


நடனத்திற்குப் பெயர்போன இரண்டு நாட்டிய மணிகளின் கவின்மிகு நடனம் ! கருத்தை ஈர்க்கும் பாடலின் வரிகள் ! அருமையான இசை ! இதைவிட வேறென்ன வேண்டும் ! அந்தக்காலத்தில் மிகப் பிரபலமான இந்தப் பாடலும் நடனமும் இன்னமும் ஒளிர்கின்றன !


'ஆறுபெருகி வரின் அணை கட்டலாகும்,
அன்பெனும் பாதையில் அணையிடலாமோ'
பேதமையாலே மாதே யிப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே'
என்பதற்கு பதில் :

சாதுர்யம் பேசாதேடி
என் சலங்கைக்கு பதில் சொல்லடி '
நடுவிலே வந்து நில்லடி
நடையிலே சொல்லடி' -


'ஆடும் மயில் எந்தன் முன்னே
என்ன ஆணவத்தில் வந்தாயோடி
பாடும் குயில் கீதத்திலே
பொறாமைகொண்டு
படமெடுத்து ஆடாதேடி ' -

இப்படிப்போய்க்கொண்டே இருக்கும் அருமையான விவாத வரிகள் !
இயற்றமிழ் இசையாய் பொங்கும் ! கேட்டு மகிழுங்கள் !

கண்ணும் கண்ணும் கலந்து ....

படம்: வஞ்சிக்கோட்டை வாலிபன்(1958)
பாடியவர்கள் : ஜிக்கி, பி.லீலா
நடனமணிகள் : பத்மினி, வைஜயந்திமாலா
பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு
இசையமைப்பு : சி. ராமச்சந்திரா


No comments:

Post a Comment